திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஆகாஷ், 20 வயதான ஜானகிராமன் இருவரும் கடந்த 17ஆம் தேதி காணாமல் போனார்கள். காணாமல் போன இருவர் தொடர்பாக பெற்றோர்கள் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 22 ந் தேதி அன்று புகார் அளித்திருந்தனர்.

அத்தகைய புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தார். உடன் இருந்த நண்பர்களிடம் காவல்துறையின் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையும் படிங்க: அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு!

விசாரணையில் நலம் பாண்டியன், மற்றும் மணி 17 வயதுடைய சிறுவன் உட்பட மூன்று பேர் இணைந்து, ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு பேரை கடந்த 18ஆம் தேதி ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா போதையில் கொன்று புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மணி 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை ஊத்துக்கோட்டை காவல் துறையினர் கைது செய்த நிலையில், நலம் பாண்டி என்பவர் ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தொடர்ந்து அவரை காவலில் எடுத்தும், மணி 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு சடலங்களையும் ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ் குமார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவமனை தடவியல் துறை மருத்துவர் அருண் கௌதம் தலைமையிலான மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!