மகளிர் வங்கிக் கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்ட சம்பவத்தால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வருக்கு நன்றி சொல்ல குவிந்தனர். தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் இன்று காலை திடீரென ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இது பெண்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக இரண்டாயிரம் ரூபாயும் சேர்த்து இந்தத் தொகை நேரடியாக அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை ஒரு சிறப்பு அறிவிப்பாக வெளியிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் திட்டத்தை முடக்க முயல்வதை முறியடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது மீண்டும் திமுக ஆட்சி அமைத்ததும் மகளிர்க்கு 2000 ரூபாயாக உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். காலை வேளையில் வங்கி அறிவிப்பு வரவுடன் பல பெண்கள் தங்கள் மொபைலில் செய்தி பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தனர். பலர் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எடுபடாது.. திமுக தோல்வி உறுதி..! TTV தினகரன் திட்டவட்டம்..!
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் பெண்கள் குவிந்தனர். ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்வதற்காக மகளிர் வந்திருந்தனர். கைகளில் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அண்ணா அறிவாலயத்தில் கைகளில் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு கொண்டாடினர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: இன்னைக்கு குட்மார்னிங் மட்டுமில்ல... சூப்பர் மார்னிங்..! உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்..!