கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் கை முறிவு.
கை முறிவு:
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ந் தேதி நடைபெற்ற தந்தை மகன் இரட்டை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!
இந்த நிலையில், போலீசாரின் தொடர் புலன் விசாரணையின் அடிப்படையில், இவ்வழக்கில் தொடர்புடைய மூலச்சி பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணன் (29) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணன் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்று அவரை கைது செய்ய காவல்துறையினர் தனியார் அட்டை கம்பெனி அருகே, 80 அடி கால்வாய் பகுதியில் சென்றபோது, போலீசாரை பார்த்து தப்பிக்கும் எண்ணத்தில் ஓடிய கிருஷ்ணன், தவறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதன்மூலம், இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மீதமுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே ஜூலை 2ம் தேதி மாலை நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துகாளிமுத்து மற்றும் 5 வயது மகன் ஜெயராஜ் என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டார். குறிப்பாக காரால் மோதி விபத்து ஏற்படுத்தி காளிமுத்துவின் தலையைத் துண்டித்த அந்த மர்ம கும்பல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் காளிமுத்து தலையை வைத்து சென்றது.
இந்த சம்பவமானது தமிழகத்தையே உலுக்கிய நிலையில் முதற்கட்டமாக காளிமுத்துவின் சொந்த ஊரான மூலச்சி பகுதியில் நடைபெற்று வந்த பழிக்கு பழி தொடர் கொலை சம்பவத்தின் தொடர்ச்சி என்றும், குறிப்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் காளிமுத்து முக்கிய குற்றவாளியாக இருந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக நெல்லை சரக டிஐஜி, நெல்லை எஸ் பி உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சுமார் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வந்த நிலையில், மேலும் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் பெருமாள் பாண்டியன் மகன்கள் 3 பேர், அதே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் பாண்டியனின் உறவினர் சிவகுருநாதன் மகன்கள் 3 பேர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் திடுக் திருப்பம்... காட்டிக்கொடுத்த டவர் நெட்வொர்க்.. தொக்காய் சிக்கிய 5 பேர் யார்?