தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக களமாடி வருகிறது. திமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது வில்லிவாக்கம் தொகுதி கார்த்திக் மோகனுக்கு ஒதுக்கப்பட்டது. கார்த்திக் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இளைஞர்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது.
வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். திமுக மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை நடத்தினார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இறுதி கட்ட பரப்புரையை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்திய போது வழிநெடுகிலும் காத்திருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க: கோவை தெற்குல ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்குறானுங்க சார்!! திமுக ஆடும் தகிடுதத்தோம்! அதிமுக புகார்!!
சென்னை வில்லிவாக்கம் தொகுதிகள் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக கூறினார். அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை., முதல்வராக முடியாது என சொன்னார்கள் என்றும் அந்தக் கட்டத்தை உடைத்து முதல்வரானேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராயபுரம் தொகுதியில் பணப்பட்டுவாடா..! கையும் களவுமாக சிக்கிய திமுகவினர்..! வைரலாகும் வீடியோ..!