திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் வட்டம் பூங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைச் செயலாளர் மருத்துவர் ஜெ ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் கொள்முதல் நிலைய பணியாளரிடமும், நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடமும் விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லினை புகாருக்கு இடமின்றி கொள்முதல் செய்திடவும், நெல்லுக்குண்டான தொகையை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை காலதாமதம் இன்றி அறவை ஆலைகளுக்கு அனுப்பிட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

முன்னதாக, பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் இருந்து, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: 2019 முதல் ஆல் ஏரியா நம்ம தான்.! கொக்கரிக்கும் திமுகவினர்
விவசாயிகளின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி இந்த நிலை மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகளின் நலன் கருதி அவ்வப்போது தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்க தொகை உயர்த்தப்படுவதன் காரணமாக, நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு காட்டிலும் நெல் வரத்து அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 1.9.2024 முதல் 7.2.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 2560 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதன் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 511 விவசாயிகளிடமிருந்து 11 லட்சத்து 98 ஆயிரத்து 43 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையாக ரூ.2603.14 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் மின்னணு பண பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நடப்பு கே.எம்.எஸ் 2024-2025 ஆம் ஆண்டு பருவத்தில் 7.2.2025 வரை 11 லட்சத்து 98,43 மெகா டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு நெல்லின் அளவோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 321 மெகா டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இதையும் படிங்க: இன்று டெல்லியில் நடந்தது.... 2026 இல் வங்காளத்தில் நடக்கும்..! அடித்து சொல்லும் சுவேந்து அதிகாரி