தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், மாநில அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி, போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் தொடர்புடைய குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்புப் படைகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும் தலா ஒரு படை வீதம் அமைக்கப்படும். மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் கூடுதல் படைகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 65 சிறப்புப் போதைப்பொருள் தடுப்புப் படைகள் செயல்படும். இவற்றில் சென்னை பெருநகரத்தில் மட்டும் 12 அதிரடிப்படைகள் அமைக்கப்படும். ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா இரண்டு படைகள் வீதம் உருவாக்கப்படும்.

இந்தப் படைகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றும். உளவுத் தகவல்களைச் சேகரித்தல், இணையவழி கண்காணிப்பு, கடத்தல் வலைகளை அழித்தல், சொத்து முடக்கம் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் இவை ஈடுபடும். இதன் மூலம் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழித்து, போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கை நோக்கி அரசு முன்னேறும்.
இதையும் படிங்க: “யானைப்பசிக்கு சோளப்பொறியா"..? தவெக அரசின் விவசாய அறிவிப்புகளை விளாசிய டிடிவி தினகரன்..!!
இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் படை உருவாக்கம், மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பான அச்சுறுத்தலை எதிர்கொள்ள தீவிரமான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல், கரும்பு விவசாயிகளுக்கு டபுள் டமாக்கா..!! ஊக்கத்தொகை அதிகரிப்பு... முதல்வர் விஜய் பேரவையில் அறிவிப்பு..!!