மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல், 2025 ஏப்ரல் மாதம் துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து பின்னர் அதை வாபஸ் பெற்றதன் மூலம் வெளிப்பட்டது. மல்லை சத்யா, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருப்பவர், கட்சியில் துரை வைகோவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் வாரிசு அரசியல் குறித்து அதிருப்தி தெரிவித்தார். வைகோவின் மகனான துரை வைகோ, கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து, 2024இல் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மோதலின் பின்னணியில், சமூக வலைதளங்களில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் மற்றும் துரை வைகோவின் ஆதரவாளர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர். மல்லை சத்யா, வைகோவை தனது உயிரை மூன்று முறை காப்பாற்றியவர் என்றும், தன்மீது துரோகி என்ற பழி சுமத்தப்பட்டது தாங்க முடியாத மனவேதனையை அளித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வைகோ, மல்லை சத்யாவை தனது உடன்பிறவாத் தம்பியாக நினைத்ததாகவும், ஆனால் அவரது சமீபத்திய செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மாத்தையா போல மல்லை சத்யாவும் துரோகம் செய்ததாக ஒப்பிட்டார். மோதல் மீண்டும் தீவிரமடைந்தது, மல்லை சத்யா தன்னை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் மல்லை சத்யா தொடர்பாக துரை வைகோ கருத்து தெரிவித்தார். மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம் என்றும் அவரைப் பற்றி பேசி தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார். அவரைப் பற்றி பேசுவதை நேர கொலை என கூறிய அவர், ஏற்கனவே நாங்கள் விளக்கம் அளித்து விட்டோம்., மல்லை சத்யா விவகாரத்தை கடந்து செல்வோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீரா பிரச்சனை! திசை திரும்பும் மதிமுக? மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..!
இதையும் படிங்க: சாதி கலவரத்தை தூண்டும் மல்லை சத்யா! மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபியிடம் புகார் மனு..!