தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான்கு தொகுதிகள் காலியாகியுள்ளதாக சட்டப்பேரவை செயலகம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் விரைவில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இந்திய அரசியல் சட்டப்படி, ஒருவர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதி ஏற்கனவே காலியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் திடீர் முடிவெடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பி. சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் (அம்பை) தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் சமர்ப்பித்தனர். சபாநாயகர் அந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டு, அரசிதழில் வெளியிட்டார். இதனால் இந்த நான்கு தொகுதிகளும் காலியாகின.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை நெருங்கியாச்சு..! கூடுதல் பாதுகாப்பு கொடுங்க..! ஆதவ் வலியுறுத்தல்..!!
ராஜினாமா செய்த இந்த நான்கு எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக த.வெ.க.வில் இணைந்தனர். இந்த அரசியல் நகர்வுகள் அதிமுகவுக்குள் தொடர்ந்து நிலவும் உள்கட்சி பதற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது. திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பான அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "கரப்பான் பூச்சியை பிரதமர் விரட்டி அடிப்பார்'..! பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி..!