தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார்கள் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறது.

அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இணைய வழியில் மே 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வந்தனர். மாணவர்களுக்கு உதவும் வகையில், கல்லூரி மற்றும் பாட வாரியாக கடந்த 5 ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆன்லைனில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஜூன் 6-ம் தேதியோடு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: MBA மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்...அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்!

இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். அப்போது, பொறியியல் படிப்புக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும் எனவும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இவரு உலக மகா நடிகன்.. முழு நேரமாகவே நடிக்க போலாம்.. முதல்வர் ஸ்டாலினை வம்புக்கிழுத்த அண்ணாமலை..!