கால்நடை வாங்குவதற்கான கடன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கால்நடை வாங்கவும், கால்நடைகளை பராமரிப்பதற்காகவும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

நஷ்டத்தில் முடங்கி கிடக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை லாபகரமானதாக மாற்றம் செயல்திட்டங்களும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். தற்போது 9 ஆயிரத்து 32 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இருப்பதாகவும், ஏற்கெனவே, 1,350 புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த நான்காண்டுகளில் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை... அண்ணாமலை கருத்துக்கு மனோ தங்கராஜ் பதிலடி!!

அதே போல செயல் இழந்து இருந்த 483 சங்கங்கள் புதிதாக செயல்பட வைத்துள்ளோம் என்றும் கலைக்கப்பட்ட 650 சங்கங்களை இந்த காலகட்டத்தில் நாங்கள் மீட்டெடுத்துள்ளோம் எனவும் கூறினார். ஆக மொத்தம் பார்த்தால் 2,484 சங்கங்கள் புதிதாக செயல்பட்டுக்கு வந்துள்ளதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய பெருங்குடி மக்கள் இதன்மூலம் பயன்பெறக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல சில சங்கங்கள் லாபம் ஈட்ட முடியாமல் கஷ்டப்படப்பட்டு வருகிறார்கள்., எனவே நாம் இதற்கு ஒரு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், எம்பிஏ மாணவர்களோடு பிணைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து மூன்று மாத காலம் சங்கங்களோடு பயணிக்க வைக்க உள்ளதாகவும், அந்த மாணவர்கள் சங்கங்களை லாபகரமானதாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!