2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், ஆட்சியமைக்க கூடுதல் ஆதரவு தேவைப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் கேட்டுள்ளது. முதலாவதாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது. இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்திற்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க மேலும் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் இரண்டாவது முறையாக ஆளுநரை விஜய் என்று சந்தித்தார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் பெரும்பான்மை இல்லாமல் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்று பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகவும் பெரும்பான்மையின் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..! " கிங்"..! அதிமுக Ex. அமைச்சர் செம்மலை பெருமிதம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகலில் எந்த நேரத்திலும் ஆளுநரை சந்திக்க கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 108 இடங்களில் வென்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் 53 தொகுதிகளை வென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர் தெரியுமா..?"..! எடப்பாடிக்கு வருத்தம்..! புதுவை அன்பழகன் பேட்டி..!