சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது என்றும் சரமாரியாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருந்தார். இந்தநிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், முந்தைய மூன்று ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழ்நாடு புறக்கணிப்பதாக வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன எனவும் தமிழ்நாடா... இல்லவே இல்லை., உங்கள் குடும்பம் தானே என கூறியுள்ளார்.

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் ஸ்டாலின் அவர்களே….அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே..,அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என சாடினார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

அண்ணா பல்கலைகழக வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை என்றும் ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை.,ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை., அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை., தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் தான் தானே என்றும் அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி ஜெயலலிதா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறினார்.

கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள் என்றும் யார்_அந்த_தம்பி ?உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள் என சரமாரியாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
இதையும் படிங்க: இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! "டம்மி அப்பா" - ஸ்டாலினை வெளுத்த இபிஎஸ்!