2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை மும்முரமாக நடைபெற்ற முடிந்தன. எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமான வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலாஜி சுகுமாரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல செயல்பட்டு திமுக கொள்ளை அடிப்பதாக குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவில்லை என்றும் தொழில் முதலீடு செய்ய வெளிநாட்டுக்கு செல்வதாகவும் கூறினார். இன்னொரு அமைச்சர் பத்து ரூபாய்க்கு பேர் போனவர் இருக்கிறார் என்றும் அதை மறக்கவே முடியாது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 6000 மது கடைகள் இருப்பதாகவும் ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சேலம் அதிமுகவின் கோட்டை..! தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பம்..! விளாசிய EPS..!
ஒரு நாளைக்கு 15 கோடி என்றும் ஐந்து வருடத்தில் 24 ஆயிரம் கோடி பணத்தை அடிப்பதாகவும் தெரிவித்தார். ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என வைத்தும் 24 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளை அடித்த அரசாங்கம் வர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை ஆதாரம் கண்டுபிடித்து வழக்கு போட்டு இருப்பதாகவும் நகராட்சி துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றாத திமுக"..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!