முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கள ஆய்வு மேற்கொண்டார். திட்ட பணிகளை தொடங்கி வைத்து தேசிய முதலமைச்சர் ஓபன் சேலஞ்சு விடுப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிமுக ஆட்சியில் உருவானது தான் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று எனவும் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா என்றும் அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கி விட்டு பேசுகிறீர்களே., உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா என்று சாடினார்.

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா என்று கேட்டுள்ளார். எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது என்றும் தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா எனவும் கேட்டு உள்ளார். செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக திமுக தெரிவித்துள்ளது என்றும் இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலைக்கு மூடு விழா… பாஜக ஆதரவாளர்களே கழுவி ஊற்றும் நிலை… விளாசிய முதல்வர்…!
நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல் என்று முதலமைச்சரை விமர்சித்துள்ளார். இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா என்றும் அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா என்றும் அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார்., திமுக ஆட்சி பற்றி கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா எனக் கேட்டுள்ளார். OPEN CHALLENGE IS STILL ON என்று கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நீட் ரத்து என்ன ஆச்சு என்று ஹின்ட் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!