ஈரோட்டில் கணவன் - மனைவி இடையிலான தகராறில் ஒன்றரை வயது குழந்தை, தாய் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கணவனே மனைவி மற்றும் குழந்தையை கொன்றது அம்பலமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கவின் பிரசாத் - அமராவதி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது.

இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அமராவதி தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கணவன் மனைவி பிரச்சனையில் மனமடைந்து போன அமராவதி கணவன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நம்ப போயிடலாம் தங்கம்.. குடும்ப தகராறில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை.. ஈரோட்டில் சோகம்!

தாய் மற்றும் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கணவன் கவின் பிரசாத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை மற்றும் தனது மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாகவும், குழந்தை தனக்கு பிறந்ததுதானா என்ற சந்தேகம் இருந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தை மற்றும் மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையில் பயங்கரம்... வீட்டின் அருகிலேயே பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை...!