ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கவின் பிரசாத் - அமராவதி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கவின் பிரசாதுக்கும் அமராவதிக்கும் இடையே பிரச்சனை முற்றியுள்ளது.

இதனால் மனமடைந்து போன அமராவதியில் கணவன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தற்கொலை தொடர்பாகவும் கணவன் கவின் பிரசாத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணவன் மனைவி இடையிலான தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!