தேர்தல் வந்துவிட்டாலே வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் கையில் பிடிக்க முடியாது. எப்படியாவது தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக சுயேட்சைகள் முதல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் வரை போட்டா போட்டி போடுவார்கள். குறிப்பாக விதவிதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறிவிட்டது.

வாக்காளர்களிடம் நெருங்கி நானும் உங்களில் ஒருவன் தான் எனக்காட்டிக்கொள்ள முயல்வார்கள். இதற்காக அவர்களுக்கு துணி துவைத்து கொடுப்பது, தண்ணீர் பிடித்து தருவது, வாக்காளர்கள் வீட்டிற்கே சென்று டீ வைப்பது, ஓட்டல்களில் தோசை சுடுவது, பரோட்டா போடுவது, காய்கறி விற்பது என வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரிப்பார்கள். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் லைக்குகளை அள்ளும். சில வேட்பாளர்கள் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு சேகரிப்பார்கள். ஆனால் யாருமே யோசிக்காத புது ரூட்டில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல விஷயங்கள் இன்னம் இருக்கும் நிலையில், தனது திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார், கிராமம் கிராமமாக அசைவ உணவு தயாரித்து பரிமாறி, தேர்தலுக்கு முன் வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இத்தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர் . பி . உதயகுமார் தொகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில், நாள்தோறும் அசைவ உணவுகளை கிராம மக்களுக்கு வழங்கி, தேர்தலுக்கு முன் வாக்குகளை சேகரிக்கும் வினோத முறையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அந்நிகழ்ச்சியின் போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த நடவடிக்கைகளை குறித்தும், தற்போது திமுக ஆட்சி காலத்தில் நிகழும் சம்பவங்களை குறித்தும் கிராம மக்களிடையே எடுத்துரைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாது... திருமாவளவன் திட்டவட்டம்!!