தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘கேம் கேஞ்சர்’ படம் வெளியாகிறது. ராக் போர்ட் நிறுவனத்தால் தமிழகத்தில் வெளியாகவுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
“என்னுடைய படத்துக்கு இதுவரை நீங்க பெரும் வரவேற்பைக் கொடுத்துருக்கிங்க, தற்போது ஷங்கருடைய இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண், கைரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோருடன் நான் நடித்துள்ளேன். பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். என்னுடைய முந்தைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போன்று இதற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த கதை மதுரையில் ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு, அதை ஆந்திராவில் நடக்கும் கதையாக கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கிறார். ஷங்கருடைய வழக்கமான பிரம்மாண்ட படமாக இதை செய்திருக்கிறார்கள். திருவின் ஒளிப்பதிவு, பிரபுதேவா, ஜானி மாஸ்டர்களின் நடனம், தமனின் இசை என அனைத்துமே நன்றாக வந்துள்ளது. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்துப் போய் சிறப்பான முறையில் செய்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்" என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார் .
‘கேம் சேஞ்சர்’ உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளது, அப்படத்திற்கு மேலும் வரவேற்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!
இதையும் படிங்க: பக்கத்து வீட்டு நாய் குலைத்ததால் ஏற்பட்ட பிரச்சனை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அடித்து கொலை