பாமகவில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பூதாகரமாக வெடித்தது. அன்புமணி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ராமதாஸ். இந்த நிலையில் பாமகவில் உள்ள நிர்வாகிகளை இன்று முதல் மூன்று நாட்களுக்கு அன்புமணி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில் பாமகவின் கவுரவ தலைவர் ஜி. கே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கேள்வி கேட்பவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்றும் நெருக்கடியான சூழலில் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!

பாமகவில் நடப்பது மனவேதனை ஏற்படுத்துவதாகவும், எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருப்பதாகவும் பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதை தங்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார். பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி தேர்தலை சந்திக்கும் நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த ராமதாஸ்.. அன்புமணி மீது இன்று பாயப்போகும் அம்பு..!