எடப்பாடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தவெக நிர்வாகிகள் தமிழக முதல்வர் விஜயின் புகைப்படத்தை தலைமை ஆசிரியர் அறையில் மாட்டுவது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஏற்கனவே எச்சரித்தும், சில இடங்களில் இது போன்ற மீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு வாகனங்களை தவெக நிர்வாகிகள் பயன்படுத்துவது போலவும், காவல் நிலையத்திற்குள் சென்று போலீஸாருடன் பேசுவதைப் படப் பாடல்களுடன் இணைத்தும், அரசு அலுவலகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தை தூக்கி வீசிவிட்டு, தற்போதைய முதலமைச்சர் விஜய் போட்டோவை மாற்றுவது போலவும் ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிமாங்குறிச்சி மாடன் அரசு பள்ளியில் சில தவெக நிர்வாகிகள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதுடன், விஜயின் புகைப்படத்தை தலைமை ஆசிரியர் அறையில் மாட்டுவது போன்ற காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவிற்கு பின்னணி இசை சேர்த்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!
அதேபோல், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் இதேபோன்ற காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் நிர்வாகிகள் நடந்து செல்வது, விஜய் புகைப்படம் வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன...
அரசுப் பள்ளிகளை அரசியல் விளம்பரங்களுக்கோ அல்லது கட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆக்சன் MODE.. அடுத்தடுத்த சந்திப்புகள்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!