சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டன.
முந்தைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் இருந்தன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்ன தெரிவிக்கப்பட்டது.

மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இத 8 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாமே? பிரதமருக்கு முதல்வர் சரமாரி கேள்வி…!
வரிக்குறைப்பின் காரணமாக கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி 2.0 காரணமாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் உள்நாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் 8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், மகேந்திரா கார் விற்பனை 50% அதிகரித்துள்ளது என்றும் 50 ஆயிரம் டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: GST 2.O எதிரொலி... ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!