தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு தென்மேற்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதற்கிடையே கடந்த ஓரிரு நாட்களாகத் தமிழகத்தில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இது மட்டுமின்றி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கவனமாக இருங்கள்... தமிழ்நாடு வெதர்மேன் அதிரடி அலர்ட்!!