அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிளவு., குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணிக்கும் இடையிலான மோதல் உள்ளிட்டவை தலை தூக்கின. நேற்று மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ பி. சத்தியபாமா ஆகிய மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இசக்கி சுப்பையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா என்று காலை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார்.

சென்னை பனையூர் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இசக்கி சுப்பையாவிற்கு அமைச்சர் ஆனந்த் உறுப்பினர் அட்டை வழங்கியதுடன் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இசக்கி சுப்பையா உடன் மீசை ராஜேந்திரன் சசிரேகா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ஏற்கனவே மூன்று எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர்.
இதையும் படிங்க: தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!
குதிரை பேரம் என்று அதிமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு வந்துள்ளனர். அதிமுகவிற்கு பெரும் பலத்தை இழக்க வைக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!