தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மறவன் மடத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான மனித ஆர் ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆலோசனை கூட்டம் என்பது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நம்முடைய பணியை எப்படி ஆற்ற வேண்டும்? அதற்கான களபணிகளையும், யுகங்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் வரக்கூடிய இந்த தேர்தலில் நம்முடைய எதிரணியில் நிற்பவர்கள் யார் என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது எப்படி? வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்காக இன்றிலிருந்து நாம் எப்படி செயல் பட வேண்டும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கக் கூடிய பொது குழுவில் நம்முடைய முதல்வர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி இருக்கின்றார்கள்.

அதில் நமக்கு மிக முக்கியமாக ஒரு பொறுப்பு நமக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய மிக முக்கியமான பொறுப்பை அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். அந்த பணியை நாம் இன்றிலிருந்து முதல் தொடங்க வேண்டும் முன்பே துவங்கியிருந்தால் வாழ்த்துக்கள் என்றார்.

இதையும் படிங்க: இப்படியா செய்வது? கோர்ட்டில் குவிந்த திமுகவினர்... பதற்றம்... பரபரப்பு!
இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திருச்செந்தூர் ஓட்டப்பிடாரம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஓசி பஸ் விமர்சனம்... பொன்முடியை வாண்டடாக வம்பிழுத்த நயினார் நாகேந்திரன்...!