பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.

இளையோர் ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தமிழக வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆடவர் விளையாட்டு பிரிவில் அபினேஷ் மோகன் தாஸ் என்பவர் இந்திய அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார். விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தங்கமகள் கார்த்திகாவுக்கு குவியும் பாராட்டு..!! நேரிலேயே போன மாரி செல்வராஜ்..!! என்ன செய்தார் தெரியுமா..??
எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை புரிந்த கார்த்திகாவுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கினார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 சவரன் நகை போடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ணகி நகரை உலக அரங்குக்கு கொண்டு போகணும்! தங்கமகள் கார்த்திகாவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து...!