தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு துறையில் பணி நியமனம் தொடர்பான ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது ரூ.888 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்ட மோசடி குற்றச்சாட்டு. அமலாக்கத் துறை விசாரணையில், 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நகராட்சி துறையில் உள்ள 2,538 பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக கண்டறியப்பட்டது.
ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இதன்மூலம் மொத்தம் சுமார் ரூ.888 கோடி அளவுக்கு பணம் சம்பாதிக்கப்பட்டதாகவும் ED தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 'ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' என்ற நிறுவனம் தொடர்பான வங்கி மோசடி வழக்கில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்கள், டிஜிட்டல் சாட்சியங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் எழுந்தவை.

அக்டோபர் 27, 2025 அன்று ED தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் எழுதி, இந்த ஊழல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரியது. இதில் அமைச்சர் கே.என்.நேரு மீதும் அவரது நெருங்கிய தொடர்புடையவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதையும் படிங்க: சமூக நீதியைக் காப்பாற்றும் திராவிட மாடல்..! நிதி தராமல் அலைக்கழிக்கும் பாஜக... அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!
எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை இதை வலுவாக எதிர்த்து வருகின்றன. இந்த திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூபாய் 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் பேசுறது எல்லாமே வடிகட்டின பொய்..!! போட்டுத்தாக்கிய அமைச்சர் கோவி.செழியன்..!!