கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாயநத்தம் அருகே உள்ள புதுக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் கமலகண்ணன் என்பவர் விவசாயம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கனகராஜ் என்பவர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது கமலக்கண்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கனகராஜன் வீட்டிற்குள் புகுந்து கனகராஜ் அவருடைய தாய் மீனா, தாத்தா தர்மலிங்கம், தம்பி கோகுல், நண்பன் மோகன் உள்ளிட்ட ஐந்து பேரை கமலக்கண்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஒன்று சேர்ந்து இரும்பு கம்பி உருட்டு கட்டையால் அடித்து கொடூரமாக தாக்கி உள்ளனர்
தற்போது கனகராஜ்.தர்மலிங்கம்.கோகுல்.மீனா ஆகிய ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்...
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!
அதேபோல் கமலக்கண்ணன் தரப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் ராணி ராஜதுரை செந்தில் ஆகிய நான்கு வரும் லேசான காயத்துடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் 10 பேரும் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
அதேபோல் கனகராஜ் தரப்பினர் கமலக்கண்ணனை அடித்ததாக கூறி கமலக்கண்ணன் கொடுத்த புகாரில் 5 பேர் இது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!