தமிழ்நாட்டின் காவல்துறை, சட்டம்-ஒழுங்கைப் பேணும் பொறுப்பை ஏற்கும் இயந்திரமாக இருந்தாலும், அதன் விசாரணை அறைகள் பலருக்கு இன்னும் பயத்தையும், இழப்பையும் தரும் இடங்களாக மாறியுள்ளன. காவல்துறை விசாரணையின்போது நிகழும் மரணங்கள், நேரடி சித்திரவதை போன்றவை சமூக நீதி அமைப்பின் இருண்ட முகத்தை வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு முறை, சமயம் சமயம் போலீஸ் அதிகாரத்தன்மையின் இருண்ட முகங்களை வெளிப்படுத்தும் சம்பவங்களால் புரண்டு கொண்டிருக்கிறது. 2009-ஆம் ஆண்டு, சென்னை அருகே அமைந்த கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம், அப்போது நாடு முழுவதும் போலீஸ் காவல் மரணங்கள் குறித்த விவாதங்களைத் தூண்டியது. இந்தச் சம்பவம், விசாரணை கைதி ஒருவரின் உயிரிழப்பை மையமாகக் கொண்டது.

போலீஸார் தாக்கியதாகக் கூறப்படும் இந்த விவகாரம், மனித உரிமைகள் மீறல்களின் அச்சுறுத்தலை மீண்டும் நினைவூட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு பழனி என்பவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட பழனி உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் பழனி உயிரிழந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: என்ன ஆச்சு? அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி... பரபரப்பில் அறிவாலயம்..!
இந்த நிலையில் விசாரணை கையில் மரண வழக்கில் மூன்று போலீசருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கூடுதல் அமரவு நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியது. கோட்டூர்புரம் SIஆக இருந்த ஆறுமுகம், காவலர்களாக இருந்த மனோகரன், ஹரிஹர சுப்ரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜார்க்கண்டில் என்கவுன்டர்! நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை! அதிரடி காட்டிய பாதுகாப்பு படை!