தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைய விருப்பமுள்ள பெண்களுக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் ஒரே நாளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளான பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதுவரை தவறவிட்டவர்களுக்கும் இனி நிதி கிடைக்க புதிய வாய்ப்பாக தகுதியுள்ள பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்டது.

தற்போது அரசின் விரிவாக்க பிரிவு இதன் மூலம் கூடுதல் தளர்வுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு 1000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் விண்ணப்பிக்க தேவையான அவசியமான ஆவணங்கள் என்ன தெரியுமா?.

சரியான அடையாள அட்டை. அதாவது ஆதார் கார்ட் அல்லது வாக்காளர் அட்டை. வங்கி கணக்கு விவரங்கள் பெண்களின் சொந்த பெயரில் இருக்க வேண்டும். அடுத்ததாக குடும்ப அட்டை எந்த பிழையும் இல்லாமல் இருக்க வேண்டும். இவையில்லாமல் விண்ணப்பிக்க இயலாது என அரசு வலியுறுத்தி உள்ளது.

இவ்வாறு ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே இன்று நடைபெறும் முகாம்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்க முடியும். முகாம்களில் விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. அனைத்து பணியும் இலவசமாக நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைன் வழியாக எளிதில் சரி பார்க்க முடியும். தேர்வு பெற்ற பெண்களுக்கு இரண்டு மாதத்திற்குள் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் வங்கி கணக்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி இந்த புதிய முகாம்கள் மூலமாக அதிகபட்சமாக 15 லட்சம் புதிய பெண்கள் இதன் வாயிலாக உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: எஸ். பி. அலுவலகத்தில் மனமுடைந்த விவசாயி தீக்குளிப்பு! கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை...
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு 'spy' வேலை.. பஞ்சாபில் மேலும் ஒரு யூடியூபர் கைது..!