நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ராசுவா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பெரும் சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவிற்கு வடக்கே, திபெத் எல்லையை ஒட்டியுள்ள இந்த மலைப்பகுதியில் அதிகாலை சுமார் ஒன்பது மணியளவில் போட்டே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சியாப்ரு பெசி மற்றும் திமுரே போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்கள், சந்தைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட் மாவட்டத்திலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்ளிட்ட பலர் இந்தப் பேரிடரில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர் என்றும், அவர்களில் தமிழ்நாட்டின் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...! மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!
வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் உலக நாட்டு மக்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து பிரதமர் அலுவலகமும் வெளியுறவு அமைச்சகமும் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காங். தனித்து நின்றால் கவுன்சிலர் கூட ஆக முடியாது..! நாங்க துப்பாக்கியே பார்த்தவங்க... அன்புமணி பதிலடி..!