இந்தியாவின் மருத்துவக் கல்வி அமைப்பில் நீட் தேர்வு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சமீப காலமாக இந்தத் தேர்வில் ஏற்பட்டுள்ள புகார்கள், கேள்வித்தாள் கசிவு, முறைகேடுகள் ஆகியவை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2026-ம் ஆண்டு நடைபெற்ற NEET-UG தேர்வில் ஏற்பட்ட கசிவு புகார்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் மே 17 இயக்கத்தினரின் வலியுறுத்தல்களும் குறிப்பிடத்தக்கவை. டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற இளைஞர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. NEET 2026 தேர்வில் கேள்வித்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது.

இந்தச் சூழலில் பல மாணவர்கள் மன அழுத்தம், பொருளாதாரச் சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் பதிவாகின. இதனால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும், NEET தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர்.
இதையும் படிங்க: அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!
போராட்டம் தீவிரமடைந்தபோது, டெல்லி போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் வேண்டாம் என கூறி திரை பிரபலங்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மே 17 இயக்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் நீட் தேர்வு எதிர்ப்பு வாசகங்களுடன் போராடினர். மேலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மெரினாவை அடுத்து கொடிசியாவுக்கு பூட்டு... கோவையில் போலீஸ் படை குவிப்பு... தவெக அரசு அதிரடி...!