தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மேயர் பிரியா அவரை சந்திக்காமல் இருந்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அவர் விடுப்பு எடுத்ததாகவும் கூறப்பட்டது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் திருவிக நகர் தொகுதியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி என்பவர் வேட்பாளராக களம் கண்டு ஜெயித்துள்ளார்.
எம்எல்ஏ பல்லவிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரு வி க நகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பல்லவி கைக்குழந்தையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது முதல் திரியை மேயர் பிரியா ஏற்றி வைத்தார். இரண்டாவது திரியை ஏற்றுவதற்கு ஒருவரிடம் மேற்பிரியா மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அதனை எம்.எல்.ஏ பல்லவி கையில் வாங்க முற்பட்டார். அப்போது சட்டென அவரது கையை நகர்த்தி குத்து விளக்கு ஏற்ற விடாமல் எம்எல்ஏ பல்லவியை மேயர் பிரியா தடுத்தார். இதை எடுத்து எம்எல்ஏ பல்லவி அங்கிருந்து கோபமாக புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுவரை தங்கள் தொகுதிக்கு ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் அதனால் தான் தாங்கள் களத்தில் இறங்கி இருப்பதாகவும் கூறினார். ஆணவம் எத்தனை நாட்களுக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார். தங்கள் தளபதி பொறுமையுடன் இருந்ததால்தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் பின்னால் இருக்கும் தாங்களும் பொறுமையை கையாள்வோம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!