திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடையேயான கூட்டணி தமிழ்நாடு அரசியலில் நீண்ட வரலாறு கொண்டது. இவை இரு திராவிடக் கட்சிகளாக இருந்தாலும், அவற்றின் கூட்டணி உறவு காலப்போக்கில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.

மவைகோவின் தலைமையில் 1994-இல் திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவானது. ஆனால், 2001, 2006, 2011, 2014, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்தே மதிமுக பயணித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், வைகோவின் மகன் துரை வைகோ, திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

திமுக கூட்டணியில் மதிமுக முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு இடையே திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தங்களோடு கூட்டணியில் சேர உள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருந்தார். அந்த அணி மாறும் கட்சி, மதிமுகவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என துரை வைகோ கூறி இருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற ஆசை இருப்பதாகவும், கூடுதல் தொகுதிகள் தொடர்பாக அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றும் துரை வைகோ கூறியுள்ளார். 12 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் ஒரு கட்சிக்கு அங்கீகாரம் என்றும் கூறினார். விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளில் கேட்க உள்ளதாக வெளிப்படையாக கூறிய நிலையில், மதிமுகவும் கூடுதல் தொகுதிகளை கேட்க வாய்ப்பு இருப்பது துரை வைகோவின் பேச்சில் வெளி வந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக - மதிமுக கூட்டணியா? உண்மையை உடைத்த துரை வைகோ !!