தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். தலையில் தலப்பை கட்டி, மரம் அறுக்கு இயந்திரத்தை வைத்து, சீமைகருவேவ மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். மேலும் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி சீமை கருவேல மரத்தை அகற்றினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் நானும் எங்கள் கோரிக்கையாக அரசுக்கு வைத்திருக்கிறோம். ஆனால் தமிழக அரசு நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அதை எப்படி செயல்படுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்ற அரசு செய்யவில்லை என்று கேட்பது நியாயமானது அதே நேரத்தில் புற்றுநோயை விட கொடியது ஊழல். கமிஷன், கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இத்தனை லட்சம், தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் இத்தனை கோடி, ஆயா வேலைக்கு இத்தனை ஆயிரம் என எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது.
இதையும் படிங்க: விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!
தலைவிரித்தாடிய ஊழல், மக்களுக்கு கேடான ஒன்றை முதல்வர் ஜோசப் விஜய் நீக்கியுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்களுக்கு கேடு வர நடந்து கொண்டிருந்த தீங்கினை, கொடிய நிலைமையை மாற்றியுள்ளார் இதைவிட ஒரு அரசு வேறு என்ன செய்ய முடியும். செய்து காட்டிவிட்டார். நான் தவறு செய்தாலும் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கமிஷன், கட்டிங் இல்லாத அரசை விஜய் ஆட்சி நடத்தி வருகிறார் அதுவே மிகப்பெரிய இமாலய வெற்றி மக்கள் அபரிவிதமான ஓட்டுக்களை மிகவும் போட்டு அவரை வெற்றி பெற வைத்தனர். அவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து தான் ஊழலை நீக்கி உள்ளார்.நிதிநெருக்கடி உள்ளது, அதை எப்படி சமாளிப்பது என்று முதல்வர் ஜோசப் விஜய் திணறிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசு வஞ்சகம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி கொடுத்தால் வாக்குறுதி பலவற்றை அவரால் நிறைவேற்ற முடியும். இந்த ஆட்சி ஆறு மாதம் நீடிக்காது என்று சாபம் விட்டனர். இந்த அரசு இருக்காது என்று பேட்டி. கொடுக்கின்றனர்.
அண்ணா, கருணாநிதி ஆகியோர் மாநில சுயாட்சிக்காக பாடுபட்டனர். தமிழக ஆளுநர் ஆய்வு செய்வது கண்டிக்கதக்கது. இது என்ன கவர்னர் ஆட்சியா? அவரிடம் திமுக ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளது. அதில் 356 பிரிவின் கீழ் அறிக்கையை அனுப்பலாமே என்ற கோரிக்கை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அது எதற்கு அரசை கலைப்பதற்கு. பொம்மை வழக்கிற்கு பிறகு, ஆட்சியை கலைக்க முடியாது.
கவர்னர் ஆட்சியை ஏன் கொண்டுவர நினைக்கிறீர்கள்? கவர்னர் வந்தால் இங்கு பிஜேபி தான் ஆட்சி செய்யும். அப்ப நீங்க பாஜகவை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் போலி நாடகமா? பாஜகவே வந்து ஆட்சி செய்துவிட்டு போகட்டும் த.வெ. க ஆட்சி செய்ய கூடாது என்ற நினைப்புதான் கவர்னர் அலுவலகத்திற்கு சென்று மோசமான இதுவரை கடைபிடித்து வந்த கொள்கைகளுக்கு எதிராக திமுக மனு கொடுத்துள்ளது.
அதோடு நிற்காமல் முதல்வர் விஜய் கரூர்க்கு போக கூடாது, பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். உச்ச நீதிமன்றம் சவுக்கால் சாட்டையடி அடித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தையே அரசியல் மைதானம் ஆக்கப் போகிறீர்களா. அவர் ஏன் போகக்கூடாது? அதை எப்படி தடுக்க முடியும், எங்களை வைத்து தடுக்க உத்தரவு பெற வந்திருக்கிறீர்களா? என்று கடுமையாக சூடு கொடுத்த பிறகு வழக்கினை திரும்ப பெற்றுள்ளனர். அப்படி என்றால் அவர்கள் நோக்கம் என்ன இந்த அரசாங்கத்தை நடத்த விடக்கூடாது என்று நினைக்கின்றனர் அந்த எண்ணம் பலிக்காது.
இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையமால் வெற்றி பெற்று முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பார். மக்கள் மனம் அப்படி தான் இருக்கிறது. விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாக நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலமைச்சர் அதை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பணத்தைப் பெற்றுக் கொண்டு நீர்நிலைகள் இருந்த இடங்களை கட்டிடம் கட்டி விட்டீர்கள். திமுக மற்றும் திமுக அரசுகள் செய்த காரணத்தினால் தான் நீர்நிலைகள் இல்லாமல் போய்விட்டது என்றார்.
இதையும் படிங்க: கூட்டணி அமைந்தும் தீராத குழப்பம்! செம கடுப்பில் முதல்வர் விஜய்! தவெகவில் புது பிரச்னை!