சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மக்கள் மெட்ரோ ரயிலில் விரைவாக பயணித்து வருகின்றனர். தற்போது சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! வேற லெவலுக்கு போகும் சென்னை.. வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்..!

இருப்பினும் விம்கோ நகர் டெப்போ முதல் மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இந்த சிரமத்துக்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை நிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பிறகு மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூந்தமல்லி டூ போரூர்.. நாளை மறுநாள் 3ம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!