ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் அந்த மனு வரும் 19-ந்தேதி விசாரணைக்காக பட்டியலிடபட இருப்பதாகவும் தமிழக அரசு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உதகை அருகே காந்தள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி உருது நடுநிலை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கபட்டு வந்தது. இதனையடுத்து கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது காந்தள் உருது நடுநிலை பள்ளி தரம் உயர்த்தபடுவதாக அறிவித்தார். அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று தரம் உயர்த்தபட்ட உருது உயர் நிலை பள்ளியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது தமிழக முதல்வர் நேற்று அன்பு கரம் திட்டத்தை தொடங்கி அதன் மூலம் பெற்றோரை இழந்த குழுந்தைகளுக்கு மாதம் 2 ஆயிரம் வழங்க உள்ள நிலையில் உதகை காந்தள் பகுதியில் உள்ள நகராட்சி உருது பள்ளியை உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ்: இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் விரைவில் பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டவும் ஆசிரியர்கள் நியமிக்க தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: “எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கிறோம்...” - மாணவர்களுக்கு தெம்பூட்டிய அன்பில் மகேஷ்...!
தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளியில் தரம் உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதோ அங்கெல்லாம் பள்ளிகள் படிப்படியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எட்டாம் வகுப்பு படித்த பிறகு எங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வருவதை தடுக்கவும் மாணவர்களின் இடை நின்றலை தவிர்ப்பதற்காக
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 500 பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் அதில் 31 பள்ளிகள் முதற்கட்டமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அன்பில் மகேஷ் நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது காலியாக உள்ள 1721 ஆசிரியர்களுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பும் போது முன்னுரிமை அளித்து நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த மனு வரும் 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட இருப்பதாகவும் கூறிய அன்பில் மகேஷ் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உதகை அருகே உள்ள லாரன்ஸ் ஆங்கில பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: ரூ.600 கோடியைக் காட்டி தமிழக அரசை பிளாக் மெயில் செய்யும் மத்திய அரசு... பகீர் தகவலை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!