மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில் தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அமைய உள்ள சிறு விளையாட்டு அரங்கத்திற்கான பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது.

இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு என தனியாக சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலூர் நகராட்சி 27 ஆவது வார்டு கருத்தப்புளியம்பட்டியில் அமைய உள்ள சிறு விளையாட்டு அரங்க பணிகளுக்கான பூமி பூஜை இன்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்.. ஆனா இது கட்டாயம் இருக்கனும்..!
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அமைச்சர், மேலூர் நகருக்கு என எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளதாகவும், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் விளையாட்டு வீரர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தவர், கலைஞர் உரிமைத்தொகை தகுதியுள்ள அனைத்து மகளிர்க்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க... டுவிஸ்ட் வைத்த ஜி.கே மணி!