தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையச் செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு முக்கிய அங்கமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி, அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்து, புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பது என்பது தொடர்ச்சியான நடைமுறையாக உள்ளது. இது 2023-இல் தொடங்கப்பட்ட “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது.
அத்திட்டத்தில், மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றைப் பார்வையிட்டு, திட்டங்களின் செயல்பாட்டை உறுதிப்படுத்துவது முதலமைச்சரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அது முதல், பல மாவட்டங்களில் இதுபோன்ற ஆய்வுகளும் புதிய திட்டங்களின் தொடக்க விழாக்களும் நடந்து வருகின்றன.

இந்தக் கள ஆய்வுகளின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உள்ளூர் மக்களுடன் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனடி தீர்வுகளை வழங்குவதோடு, முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று கள்ளக்குறிச்சியிலும் நாளை திருவண்ணாமலையிலும் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. கள்ளக்குறிச்சியில் 1173 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மற்றும் 139 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆட்சியரகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: தியாக பெருவாழ்வு... நல்லக்கண்ணுவின் 101வது பிறந்தநாள்... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மழை...!
அதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். வீரசோழபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகளில் இருபுறமும் திரண்டு இருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்து இறங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனிடையே நாளை திருவண்ணாமலையில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் 2,095 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: நாட்டைப் பிளவுபடுத்தி குளிர்காயும் கலவர கும்பல்... அடக்கணும்...! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்...!