கரிகால் சோழனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகின் பழமையான அணைகளில் ஒன்று கல்லணை. இந்த நீர் திறப்பு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயத்திற்கு உதவும். இந்த ஆண்டு, கல்லணை புதுப்பொலிவு பெற்று, வரலாற்றில் முதல்முறையாக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார். இந்த நிலையில் மலர்களை தூவி, பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் டி ஆர் பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கல்லணையில் மலர்களை தூவினர். கல்லணையில் இருந்து குருவை சாகுபடிக்காக வினாடிக்கு 2700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

இதையும் படிங்க: உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !