இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது.
இதையும் படிங்க: இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில்,எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன் பிடித்ததாக கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் மீனவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது 2025-ஆம் ஆண்டில் நடைபெறும் 17 வது சம்பவம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழர்களின் 237 மீன்பிடி படகுகளும் 80 மீனவர்களும் தற்போது இலங்கையின் பிடியில் உள்ளதாக தனது கடிதத்தில் முதல்வ ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தனது கடிதத்தின் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை