தொடர் மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ மாம்பழத்தின் விலை 100 ருபாய் முதல் 250 ரூபாய்க்கு விலை போகும். ஆனால் அதிலிருந்து 30 ரூபாயாக குறைந்துள்ளது. விற்பனை இல்லாததால், தினமும் 50 கிலோ வரை மாம்பழங்கள் வீணாகி குப்பையில் கொட்டப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில் மாம்பழங்கள் அதிகளவில் விளைந்தபோதிலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் மாம்பழங்களை வாங்க ஆள் இல்லாததால், விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை குறைவால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள நிலையில், மாம்பழங்கள் ஏரிகளில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

இந்த நிலையில், மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடகோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், மாம்பழக் கூழுக்கான GSTயை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல், மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50 க்கு 50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தனது கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!