சென்னை கிண்டியில் Conversion conclave 2026 மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலாக்க மாநாட்டில் 74,267 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மாநாட்டில் உரையாற்றி உள்ளார். திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல் என்றும் மக்கள் வளர்ச்சிக்கான மாடல் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களுக்கான பதில் இந்த மாநாடு என்று தெரிவித்தார். தொழில்துறையில் செய்த சாதனைகளை நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்து முறியடிப்போம் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று தெரிவித்தார். ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறுவதை பார்த்து பார்த்து உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகிறது என தெரிவித்தார். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 41% என்று கூறியுள்ளார். முதலீடுகள் செயலாக்கம் மாநாடு என்பது இந்தியாவில் எங்குமே இல்லாத ஒன்றை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். அனைத்து தொழில் துறையினருக்கும் நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும் கடந்தாண்டு இந்தியாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக இருந்த நிலையில் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக இருக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுகவின் அடுத்த ஊழல்... வாரி சுருட்ட பிளான்..! தின்னு கொழுத்தது போதலையா? நயினார் விளாசல்..!
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களின் திறப்பு விழா நடந்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் உற்பத்தியோடு தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சியை ஒப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!