நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேஜி வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 17ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 22,757 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர். 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்... முக்கிய உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் சுமார் 18,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 9528 மாணவர்களும் திருப்பூரில் 9,385 மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல, சேலம் மாவட்டத்தில் 8573 பேரும் தென்காசி மாவட்டத்தில் 8019 பேரும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்திலேயே குறைவாக நீலகிரியில் சுமார் 1300 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தாராபுரம் பகுதியில் 2082 பேரும் கோவில்பட்டியில் 2544 பேரும் சேர்ந்துள்ளனர். தேனியில் 2559 பேரும் ஒட்டன்சத்திரம் பகுதியில் 3013 பேரும் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடனா? ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!