பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாகச் சென்ற எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கடக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார்.
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்., அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும்., அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக மாநாட்டுக்கு போறீங்களா? யார் யாருக்கு அனுமதி இல்ல! முதல்ல இது தெரிஞ்சுக்கோங்க
மேலும், ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல் என்பதை அப்போதே ஆணித்தரமாக கூறியதை சுட்டி காட்டினார்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது என்றும் விஜய் தெரிவித்தார்.
ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: #2026 ELECTION: ADMK கூட கூட்டணி? அதிரடி முடிவை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!