பாஜகவின் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் தமிழ்நாடு பிரிவு சார்பில், வரும் ஜூன் 22 அன்று மதுரையில், பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, முருகப் பெருமானின் அறுபடை வீடு கோவில்களை சீரமைக்கவும், ஹிந்து பண்பாடு மற்றும் தர்மத்தைப் பாதுகாக்கவும், கோவில்களை மீட்டெடுக்கவும், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கவும் “குன்றம் காக்க, கோயிலை காக்க” என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது.

முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அது குறித்து சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரையில் நடக்கும் மாநாடு அரசியல் கட்சி மாநாடு அல்ல முழுக்க முழுக்க ஆன்மீக மாநாடு என தெரிவித்தார் முருக பக்தர்கள் மாநாட்டில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறினார்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக 21 ஆம் தேதி சென்னையில் இருந்து ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 23ஆம் தேதி மதுரையிலிருந்தும் சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாங்கள் வலிமையோடு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு திமுகவினர் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இது அரசியல் மாநாடு அல்ல ஆன்மீக மாநாடு என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மோசடி வழக்கில் கைதான பாஜக நிர்வாகி... சாட்டையை சுழற்றிய நயினார் நாகேந்திரன்!!

கூட்டணி குறித்து எங்களிடம் மட்டுமே கேட்கப்படுகிறது என்று தெரிவித்த நயனார் நாகேந்திரன் முதலமைச்சரிடம் ஏன் கேட்க மறுக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றத்தில் எப்போதும் பதட்டமான சூழல் ஏற்பட்டதில்லை என்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று எண்ணம் உள்ளது எனவும் கூறினார். முருகனை அரசியலுக்காக கையில் எடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.300 கோடிக்கு வீடு.. டாஸ்மாக் காசில் கெட்ட ஆட்டம் போட்ட உதயநிதி நண்பர்.. திமுக குட்டை உடைத்த நயினார்..!