சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்டகாலப் பங்களிப்பை வழங்கியவருமான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” என்ற நூலையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தோழர் நல்லக்கண்ணுவின் வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டினார். போராட்டங்களின் மூலம் மக்களின் உரிமைகளைப் பெற முடியும் என்பதை உறுதியாக நம்பியவர் நல்லக்கண்ணு என்று குறிப்பிட்ட அவர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நீட் முறைகேடு எதிர்ப்புப் போராட்டத்தை அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மொழியின் உரிமையையும், தமிழ்நாட்டின் உரிமையையும் பாதுகாக்கும் பணியில் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஒன்றுபட்டு நிற்கும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார். தோழர் நல்லக்கண்ணு, தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!
விடுதலைப் போராட்ட வீரர், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உழைத்தவர், சமூக நீதிக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என அவரது பங்களிப்பு பலதரப்பட்டது. சிறைவாசம், சித்திரவதை உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் தனது கொள்கையில் உறுதியாக நின்றவர். திராவிட இயக்கத்துடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய அவர், இரு இயக்கங்களும் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதையும் படிங்க: “இன்று போய் நாளை வா...” - மார்க்கண்டேயனுக்கு மரண ட்விஸ்ட்... ஷாக்கில் திமுக...!