நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் யுஜி நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேசிய தேர்வு முகமை (NTA) முழு தேர்வையும் ரத்து செய்தது. முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு NTA புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தமிழ் உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும்.
மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் NTA வெளியிட்டுள்ளது. தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வசதியை இணையத்தில் திறந்துள்ளது. வருகிற ஜூன் 21-ம் தேதி இரவு 11.50 மணி வரை இந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
இதையும் படிங்க: குகூள் மேப்-பை தயவுசெஞ்சு நம்பாதீங்க!! நீட் தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்!

மாணவர்கள் தங்கள் விருப்பமான நகரம் அல்லது தேர்வு மையத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வு மைய விவரங்கள் அடங்கிய ஹால் டிக்கெட் (அனுமதி அட்டை) பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் neet.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய இணைய முகவரிகளைப் பார்வையிட்டு தேவையான தகவல்களைப் பெறலாம்.
நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பான விசாரணை முடிவடையும் வரை மாணவர்கள் மத்தியில் கவலை நீடித்து வருகிறது.
இந்த மறுதேர்வு மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்கும் என்று NTA நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் சரியான தயாரிப்புடன், அமைதியாகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: குகூள் மேப்-பை தயவுசெஞ்சு நம்பாதீங்க!! நீட் தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்!