நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றிலிருந்து அமலில் இருக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.
இதில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் பரிசு பொருட்கள் வினியோகம் பணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து தேர்தல் கட்டுப்பட்டு அறைக்கு புகார் அளிக்க அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதற்கான இலவச அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளார்கள்.

18004258373 இந்த எண்ணை பயன்படுத்தி புகார் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். வரக்கூடிய புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அலுவலர்கள் தகவல் தெரிவித்து அந்த பிரச்சனையை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட இருக்கின்றார்கள்.
இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!
மேலும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் செய்திகள் குறித்து அதையும் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 5 சட்டமன்ற தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குழுக்களாக பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கவும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு... +1 மாணவன் வெறிச்செயல்..!! தீவிர விசாரணை..!