திருமங்கலத்தில் நேற்று இரவு கணருடன் டூவிலரில் சென்ற புதுப்பெண்ணை கணவரை தாக்கி காரில் கடத்தி சென்ற நான்குபேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சுவாமிமல்லம்பட்டியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ். சென்னையில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரிசல்காலான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் சுபலெட்சுமி(22)க்கும் , கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று விஜயபிரகாஷ் தனது மனைவி சுவலெட்சுமி மற்றும் திருமங்கலம் விடத்தகுளத்தினை சேர்ந்த தனது தங்கை நாகலட்சுமி, அவருடைய குழந்தை ரக்ஷன் ஆகியோரை ஏற்றி கொண்டு இரவு 9 மணியளவில் விடத்தகுளம் சென்றார். தங்கையை அவரது வீட்டில் விட்டு விட்டு, அங்கிருந்து மனைவியுடன் டூவிலரில் விஜயபிரகாஷ் தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
இதையும் படிங்க: கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

விடத்தகுளம் - திருமங்கலம் ரோட்டில் சுங்குராம்பட்டி கிராமத்தின் அருகே வந்தபோது, பஸ்ஸ்டாப்பில் கார் ஒன்று நின்றிருந்தது. அதன் அருகே நின்றிருந்த 30 வயது நபர்கள் மூவர் திடீரென சாலையின் குறுக்கே வந்த விஜயபிரகாசை நிறுத்தி, திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த அவர் கண்முன்னே அவரது மனைவி சுவலெட்சுமியை பிடித்து தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றினர்.

காரில் தயாராக இருந்த டிரைவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரினை திருமங்கலம் நோக்கி ஓட்டி சென்றுவிட்டார்.தனது கண்முன்னே தனது மனைவியை கடத்தி சென்ற மர்மநபர்கள் குறித்து விஜயபிரகாஷ் நேற்று இரவு திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த திருமங்கலம் ஏஎஸ்பி அனிசுல்நாகர் மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் சுங்குராம்பட்டி கிராமத்திற்கு சென்று நேரடி விசாரணை செய்து நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!