மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? என்பது குறித்தபொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,"தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக இருக்கிறேன். தமிழ்நாடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அமைச்சர்கள் பேசுகிறார்கள், எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பேசுகிறார், உறுப்பினர்கள் பேசுகிறார்கள். சபாநாயகரும் தீர்ப்பு வழங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, நாடாளுமன்றத்தை விட சட்டமன்றம் தான் சிறப்பாக செயல்படுகிறது என்ற நிலை உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பதில்லை. அமைச்சர்கள் பதில் அளிப்பதில்லை. உறுப்பினர்கள் பேசுவதில்லை. சபாநாயகர் தொடர்ந்து உட்காருங்கள் என்று மட்டுமே கூறுகிறார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் எந்தவிதமான விவாதமும் நடைபெறவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.
இந்தக் கூட்டத்தொடரில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக பட்டியல் உள்ளது. ஆனால் எந்த ஒரு மசோதாவும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை; விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த 12 மசோதாக்களில் சில வேடிக்கையான விஷயங்களும் உள்ளன. உதாரணமாக, பொதுத்தேர்வுகளில் நியாயமற்ற செயல்களைத் தடுக்கும் மசோதா ஒன்று உள்ளது. அந்த மசோதாவில் உள்ள பிரிவுகளைப் பார்த்தால், நியாயமற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான பிரிவுகள் இல்லை. மாறாக, நியாயமற்ற செயல்கள் நடைபெற்ற பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்த பிரிவுகளே உள்ளன.
இதையும் படிங்க: மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென நடந்த சம்பவம்... உச்சக்கட்ட கோபத்துடன் விஜய் அரசை விளாசி தள்ளிய இபிஎஸ்...!
அப்படியானால் அதற்கு தடுப்பு மசோதா என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்? தண்டனை மசோதா என்று வைத்திருக்கலாம்.தமிழிலும் ஆங்கிலத்திலும் இதற்கு ஒரு பழமொழி உள்ளது. குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவது என்பதுபோல, சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது தடுப்பு நடவடிக்கை ஆகாது.நியாயமற்ற செயல்கள் நடைபெற்றால் தண்டிப்பதற்காக ஏற்கனவே பல்வேறு குற்றவியல் சட்டங்கள் உள்ளன. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அப்படியிருக்க, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வந்துள்ளனர். ஆனால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.மகாராஷ்டிராவில் இரண்டு பொதுத்தேர்வுகளும், ராஜஸ்தானில் ஒரு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இந்தச் சட்டம் பயனற்ற சட்டமாகவே உள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதற்குற்கும் தொகுதி மறுவரையரைக்கும் சம்பந்தமே கிடையாது. திருத்தப்பட்ட அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்தம் செய்வதே பாஜக அரசின் நோக்கமாக உள்ளது.தொகுதி மறுவரையரையை கொண்டுவந்தால் தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையும், வடமாநிலங்களில் உயரும்.தொகுதி குறைவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை எதிர்த்து தான் குரல் எழுப்பினோம்.ஆனால் அந்த குரலை நெறித்து சட்டத்தை இயற்ற பாஜக அரசு முயற்சி செய்து வருகிறார்கள்.
அதனால் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்கள். தொகுதி மறுவரையரை விவகாரத்தில் திமுக வினர் தடுமாறினார்கள்.நாங்கள் No delimitation என்று சொல்லும் போது , திமுகவில் இரண்டு குரல்கள் Fair delimitation என்ற சொற்றொடரை கொண்டு வந்தார்கள். அந்த குரல்களும் தற்போது ஒடுங்கிவிட்டது.தொகுதி மறுவரையரை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்காதது எனக்கு வருத்தம் அளித்தது. மறுநாள் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையரை எதிரான தீர்மானத்தில் திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்கு அளித்தார்கள்.
இதனால் நான் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
த.வெ.க, திமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒற்றுமையாக இருந்து தொகுதி மறுவரையை தோற்கடிப்போம்.அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கிடையாது.
அதிமுக கலைகின்ற கட்சி. அது ஒலித்தாலும் பயன் இல்லை.உறுப்பினரே இல்லாத ஒரு கட்சி சேர்ந்து பாடினால் என்ன? பாடாவிட்டால் என்ன?FCRA, Renewal பல நூறு அப்ளிக்கேஷன் நிலுவையில் உள்ளது.இஸ்லாமிய கிருஸ்த்துவ நிறுவனங்களை ஒடுக்க எந்தளவும் செல்வார்கள்.மதமாற்றம் செய்கிறார்கள் என பொய் பிரச்சாரம் செய்து நசுக்குகிறார்கள்.இந்த மசோதவை தோற்கக்கடிக்க வேண்டும். ஒரு நாடு ஒரு தேர்தல் பூச்சாண்டி காட்டி வருகிறார்கள்.இதை நாங்கள் எதிர்க்கிறோம்.இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.இந்த சட்டத்தை மேம்படுத்த முடியாது கிழித்து போட வேண்டும். மழைகால கூட்டத்தொடர் மிகுந்த வேதனை அளிக்கிறது.எந்த பயனும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,"வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கக் கூடாது. வரலாற்று பின்னணியை கருத்தில் கொண்டு அதன் முதல் இரண்டு பத்திகளை பயன்படுத்துவது தொடர்பாக அரசியல் சாசன நிர்ணய சபையில் முடிவு செய்யப்பட்டது. 3 முதல் 6-வது பத்திகளில் குறிப்பிட்ட மதக் கடவுள்களுடன் நாட்டை உருவகப்படுத்தும் கருத்துகள் இடம்பெற்றுள்ளதால், அவற்றை அனைவரும் கட்டாயமாக பாட வேண்டும் என வலியுறுத்துவது மதச்சுதந்திரத்துக்கும் தனிமனித உரிமைக்கும் எதிரானது.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவது குற்றமோ அவமதிப்போ அல்ல என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அதே நியாயம் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கும் பொருந்த வேண்டும் . கோவையில் ஒரு விதமாகவும் டெல்லியில் வேறு விதமாகவும் குடியரசு துணைத் தலைவர் பேசுவது நியாயமா?. வந்தே மாதரம் தொடர்பான விவாதத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே மாணவர்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. 10 முதல் 15 ஆயிரம் மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 முதல் 70 ஆயிரம் பேர் திரண்டார்கள், எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பும் போராட்டத்தின் பின்னணியில் இல்லை. வேலையின்மை, கல்வி மற்றும் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் இளைஞர்களிடம் மிகப்பெரிய கோபம் உருவாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு எதிர்வினையை சந்தித்தே ஆக வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் மூலம் ஆட்சியாளர்கள் உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் இபிஎஸ் ஆவேசம்.. பொறுமையா பேசுங்க.. சபாநாயகர் அறிவுறுத்தல்.!